யாழ்.நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியின்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு! நாயன்மார்கட்டை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியின்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு! நாயன்மார்கட்டை சேர்ந்தவர்..

யாழ்.நீர்வேலியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார். 

உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு