தமிழ்நாடு - திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்! யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தமிழ்நாடு - திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்! யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்..

தமிழ்நாடு - திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கை தமிழர்களை விடுவிக்ககோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையில் உள்ளவர்களின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் தங்களது வீடுகளில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை உடன் விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது உறவுகளை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு