பாலியல் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா கைது!!

ஆசிரியர் - Editor II
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா கைது!!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் டேராடூனில் இருந்து தப்பியோடி டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் சுசில் ஹரி இண்டர்நேஸ்னல் என்ற பாடசாலையை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. 

சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அந்த பாடசாலையின் ஆசிரியைகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தலைமறைவான பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இருப்பினும் குறித்த வைத்திய சாலைக்கு பொலிஸார் செல்வதற்கு முன் பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனார். இந்நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. 

தெற்கு டெல்லியின் சாக்கெட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி பொலிஸ் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் மடக்கி பிடித்தனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை, அங்கிருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற ஆணை பெற்று சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு