யாழ்.மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் 18 பேர் கொரோனா தொற்றினால் மரணம்! இரு வாரங்களில் 1230 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் 18 பேர் கொரோனா தொற்றினால் மரணம்! இரு வாரங்களில் 1230 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்துவரும் நிலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் சுமார் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. 

மேலும் கடந்த 14 நாட்களில் 1230 பேர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானதாகவும் தொிவிக்கப்படுகின்றது. மேலும் ஜீன் 14ம் திகதிவரை மாவட்டத்தில் 4252 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 

58 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தொியவருகின்றது, யாழ்.மாவட்டத்தில் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாழ்ப்பாணம், நல்லுார், சண்டிலிப்பாய், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்,

அதிக மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு