சங்கக்காரவிற்கு கௌரவ நாமம்!!

ஆசிரியர் - Editor II
சங்கக்காரவிற்கு கௌரவ நாமம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கௌரவமான ர்யுடுடு ழுகு குயுஆநு விருதிற்காக உள்வாங்கப்பட்டுள்ளது.

குறித்த கௌரவ நாமமானது சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், சிறந்த விக்கெட் காப்பாளராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரருமாக விளங்கிய ஒரு சில வீரர்களுள் குமார் சங்கக்காரவும் உள்ளார். 

இந்நிலையில் குறித்த கௌரவ நாமத்தை பெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் 2 ஆவது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.

இதற்கு முன் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 2016 ஆம் ஆண்டு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக இந்த கௌரவ நாமத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு