எல்.பி.எல் ரி-20 தொடர்!! -ஜூலை மாதம் 30 முதல் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை-

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் ரி-20 தொடர்!! -ஜூலை மாதம் 30 முதல் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை-

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 போட்டி தொடருக்கான திட்டங்களை விரைவில் இறுதி செய்ய முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. 

கடந்த வருடம் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்று இருந்தன. இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கடந்த தொடரின் இறுதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

எனினும் இந்த முறையும் 5 அணிகளே பங்கேற்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது லங்கா மிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு