பயணத்தடையை 21ம் திகதிக்கு பின்னும் நீடிக்கவேண்டுமானால் நியாயமான காரணத்தை முன்வையுங்கள்! சுகாதார பிரிவிடம் இராணுவ தளபதி கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பயணத்தடையை 21ம் திகதிக்கு பின்னும் நீடிக்கவேண்டுமானால் நியாயமான காரணத்தை முன்வையுங்கள்! சுகாதார பிரிவிடம் இராணுவ தளபதி கோரிக்கை..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிக்கவேண்டுமானால் அதற்குரிய நியாயமான காரணத்தை முன்வைக்குமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தொிவிக்கும்போது நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிப்பது தொடர்பாக சுகாதார துறையினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், 

பயணத்தடை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிக்கவேண்டுமானால் நியாமான காரணத்தை முன்வைக்கும்படி தாம் சுகாதார பிரிவிடமும் கோரியிருப்பதாக இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு