யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை! 200 படுக்கைகளுடன் புதிய சிகிச்சை நிலையம், நாவற்குழியில் திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை! 200 படுக்கைகளுடன் புதிய சிகிச்சை நிலையம், நாவற்குழியில் திறக்கப்பட்டது..

யாழ்.நாவற்குழி அரச களஞ்சியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் சிகிச்சை நிலையமானது 

இன்று காலை யாழ்இமாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், 

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு