அடுக்கு மாடியில் பரவிய திடீர் தீ!! -குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்-

ஆசிரியர் - Editor II
அடுக்கு மாடியில் பரவிய திடீர் தீ!! -குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்-

தொடர் மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் திபத்தில் சிக்கிய குழந்தைகளை குழாய் வழியாக ஏறி பாதுகாப்பாக மீட்ட துணிச்சல் மிக்க நபர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றது. 

ரஸ்யாவில் தீவிபத்து நேர்ந்த மூன்றடுக்குக் கட்டடத்தில் குழாய் வழியாகத் துணிச்சலுடன் ஏறிய உள்ளூரை சேர்ந்த மூவர் யன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர்.

தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில் யன்னல் வழியே அபயக் குரலைக் கேட்ட துணிச்சல் மிக்க 3 பேர் கட்டடத்தின் குழாய் வழியே ஒருவர் பின் ஒருவராக ஏறி நின்றுகொண்டனர்.

யன்னல் வழியே ஒவ்வொரு குழந்தையாக வாங்கிக் கீழே நின்ற அடுத்தவரிடம் கொடுக்க அவர் மற்றொருவரிடம் கொடுக்கத் தரையில் நின்றவர்கள் அவர்களை வாங்கிக் கொண்டனர். இவ்வாறு பாதுகாப்பாகக் குழந்தைகள் இருவரையும் மீட்ட வீடியோ காட்சி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு