யாழ்.அச்செழு பகுதியை சேர்ந்த போலி பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது! பொலிஸ் இலட்சினை ஒட்டிய மோட்டார் சைக்கிள் பறிமுதல்..

பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியதுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் காண்பித்து
நடமாடிய ஒருவரைக் கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். அச்செழு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.