சேவை நீடிப்பு பெற வடமாகாணத்தின் உயர் அதிகாரிக்கு சாவகச்சோி பலாப்பழம்! அரச வாகனத்தில் கொழும்புவரை அனுப்பிய அதிகாரி..

ஆசிரியர் - Editor I
சேவை நீடிப்பு பெற வடமாகாணத்தின் உயர் அதிகாரிக்கு சாவகச்சோி பலாப்பழம்! அரச வாகனத்தில் கொழும்புவரை அனுப்பிய அதிகாரி..

வடக்கில் காக்கா பிடித்து கதிரையை தக்கவைக்கும் பாரம்பரியம் தொன்றுதொட்டு இருந்துவரும் நிலையில் வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி ஒருவர் சேவை நீடிப்பு பெறுவதற்காக மாகாணத்தின் உயர்நிலை அரச அதிகாரி ஒருவருக்கு தனது வாகனத்தில் பலாப்பழம் அனுப்பியிருக்கின்றார். 

இந்த காக்கா பிடிக்கும் கதை தற்போது மாகாணசபை அலுவலகத்தில் சந்தி சிரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த பிரதம செயலாளர் பதவிக்கு இப்போதே பலர் பலருடைய அலுவலக படி தொடக்கம் வீட்டு படிவரை ஏறி இறங்குவதாக தகவல்கள் வெளியுள்ளது. 

அதற்கிடையில் தற்போதைய பிரதம செயலாளருக்கே ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி அரசுக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி மாகாணத்தின் உயர்நிலை அதிகாரியை குளிர்ச்சிப்படுத்த கொழும்புக்கு பலாப்பழம் அனுப்பியுள்ளார். 

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பலாபழங்களின் சுவை உலகம் அறிந்த ஒன்று என்ற நிலையில் அந்த உயர் அதிகாரியும் அறிந்து பலாப்பழங்களை வாங்கி வைத்ததுடன் சேவை நீடிப்பு தொடர்பில் காதில் போட்டுக் கொண்டதாக பலாப்பழம் கொடுத்து அனுப்பிய அதிகாரியின் அலுவலகத்தில் கதை காட்டு தீயாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு