யாழ்.குருநகரில் திருமண வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர்! இரு குடும்பங்களை சேர்ந்த 16 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் திருமண வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர்! இரு குடும்பங்களை சேர்ந்த 16 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..

யாழ்.குருநகரில் சுகாதார பிரிவின் அனுமதி பெறாமல் திருமண நிகழ்வு இடம்பெற்ற வீட்டினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டுள்ளதுடன் இரு குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

குருநகர் பகுதியில் அனுமதி பெறாமல் திருமண நிகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் பிரிவினர் திருமண நிகழ்வு நடைபெறும் வீட்டை முற்றுகையிட்டதுடன், 

சுகாதார பிரிவினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இதன்போது திருமண நிகழ்வுக்கு அனுமதி பெறப்படாமை தொியவந்திருக்கின்றது. 

இரு குடும்பங்களை சேர்ந்த 16 பேரை தனிமைப்படுத்தியுள்ளதுடன், மேல் நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு