யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் 29 பேர் கைது! 11 படகுகள் மீட்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் 29 பேர் கைது! 11 படகுகள் மீட்கப்பட்டது..

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடாரப்பு கடற்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 11 படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் பெருமளவு கடலட்டை ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

நாகர்கோவில், குடாரப்பு, மாமுனை ஆகிய பகுதிகளிலுள்ள கடற்கரையில் வாடி அமைத்து, கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டு வந்த மீனவர்களையே கடற்படை கைது செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அதிகாரிகளிடம் 

மீனவர்களையும் கைப்பற்றிய உபகரணங்களையும் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். இவர்களை, பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்திற்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு