யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் புதுக்குடியிருப்பு மகளுக்கு வாழ்வாதார உதவி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் புதுக்குடியிருப்பு மகளுக்கு வாழ்வாதார உதவி..

யாழ்.சந்நிதியான் ஆச்சிரமத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட வசுவமடு  மேற்கு நெத்தலியாறு மற்றும் விசுவமடு கிழக்கு தொட்டியடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற சுமார் 100 குடும்பங்களுக்கு 

அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் சி.ஜெயக்காந்தன்  சந்நிதியான் ஆச்சிரமத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கிணங்க குறித்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

பிரதேச செயலர் சி.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள்  மற்றும் ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஞா.கிஷோர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான கேதினி, கிருபாயினி ஆகியோர் கலந்து கொண்டு 

அத்தியாவசிய உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு