யாழ்.கந்தரோடையில் வீடு உடைத்து தாலிக்கொடி மற்றும் பணத்தை திருடியவர் யாழ்.நகரில் கைது! நல்லூரை சேர்ந்தவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கந்தரோடையில் வீடு உடைத்து தாலிக்கொடி மற்றும் பணத்தை திருடியவர் யாழ்.நகரில் கைது! நல்லூரை சேர்ந்தவராம்..

யாழ்.கந்தரோடை பகுதியில் வீட்டை உடைத்து உட்புகுந்து தாலி கொடியை திருடியவர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து நகைகள், பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தரோடை பாரதி வீதியில் உள்ள வீடோன்றில் நேற்று மாலை வீடுடைத்து 21 பவுண் தாலிக்கொடி, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள், உண்டியல் பணம் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன திருடப்பட்டன.

வீட்டில் இருந்தவர்கள் அயலில் உள்ள காணி துப்புரவு செய்ய சென்றிருந்த வேளை இந்த திருட்டு இடம்பெற்றது. சம்பவம் குறித்து நேற்று மாலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், 

சந்தேக நபரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யாழ்.நகர் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு