யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸார், இராணுவம் இணைந்து சோதனை நடவடிக்கை! தேவையற்று நடமாடுவோர் மீது நடவடிக்கை..

யாழ்.கொக்குவில் பகுதியில் இன்று காலை பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனர்.
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தடையை மீறி யாழ்.மாவட்டத்தில் மக்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பயணத் தடையை மீறி செயற்பட்ட சிலர் கடுமையாக பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு,
வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.