யாழ்.சுன்னாகத்தில் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்து கொள்ளை! நல்லுரை சேர்ந்தவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்து கொள்ளை! நல்லுரை சேர்ந்தவர் கைது..

யாழ்.சுன்னாகம் - மயிலணி பகுதியில் மின்சாரசபை ஊழியரின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டினுள் புகுந்து இரண்டரை பவுண் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தரினாாால்ல முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததுகுறித்த முறைப்பாட்டின் பிரகாரம் 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நல்லூர்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து 

திருடப்பட்ட இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு