சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்!! -11 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்!! -11 பேர் பலி-

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மாகாணத்தின் ஹோம்ஸ் நகரத்தில் உள்ள ஹிர்பெட் அல் டின் என்ற கிராமத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இன்று புதன்கிழமை அதிரடி தாக்குதல் நடத்தினர். 

இந்த பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தளங்களும் செயல்பட்டுவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 7 பேர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு