யாழ்.மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவம் விசேட வாகன வசதிகளை ஒழுங்குபடுத்தி கொடுத்திருப்பதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

நாளைய தினம் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக 

ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து 

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் பிரியந்த பெரேராவின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் 

வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். எனவே யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரில் 

 வாகன வசதி தேவைப்படுவோர் தமது கிராம சேவகருடன் தொடர்புகொண்டு பிரதேச செயலர் ஊடாக தமக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து 

தமக்கான ஓய்வூதிய கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். தற்போதுள்ள கொரோனா இடர் நிலையினை கருத்திற்கொண்டு 

 முதியோருக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும் இராணுவத்தினரால் 

 இந்த வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு