அதிகாலை 5 மணிக்கே கசிப்பு வியாபாரம்! யாழ்.மானிப்பாய் - சங்கானை வீதியில் ஒருவர் கைது..

யாழ்.மானிப்பாய் - சங்கானை வீதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மானிப்பாய் - சங்கானை தேவாலய வீதியில் கசிப்பு காச்சி
விற்பனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டர். இவரிடம் இருந்து 15லீற்றர் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணம்
மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரனைக்காக மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.