யாழ்.பருத்தித்துறையில் பெருமெடுப்பில் பிறந்தநாள், தொட்டிலிடும் நிகழ்வு! அமைச்சரும் கலந்து கொண்டாராம், 10 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் பெருமெடுப்பில் பிறந்தநாள், தொட்டிலிடும் நிகழ்வு! அமைச்சரும் கலந்து கொண்டாராம், 10 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..

பயணத்தடை அமுலில்  உள்ள நிலையில் பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் பிறந்தநாள் மற்றும் தொட்டிலிடும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேபோல் பருத்தித்துறை - மாதனை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி திருவிழா நடத்திய ஆலய நிர்வாமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ. ஜென்சன் ரொனால்ட் தலைமையில் கிராம உத்தியோகத்தர்கள் பருத்தித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது 

கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள் இனங்காணப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அவர்களை 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர். 

கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் இருவர் தமது 50வது பிறந்த நாள் நிகழ்வை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் 

மக்களை ஒன்று கூட்டி பொது சுகாதார நடைமுறைகளுக்கு முரணான விதத்தில் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்த முப்பத்தோராம் நாள் 

நிகழ்வுகளை அதிகளவான மக்களை கூட்டி நடத்தியுள்ளனர். இவை தொடர்பில் இனங் காணப்பட்ட குறித்த குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு 

இந்நிகழ்வில் அமைச்சர் ஒருவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மாதனைப் பகுதியில் கோவில் திருவிழா ஒன்று 

பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் அதனை மீறி அதிகளவான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் நிகழ்வுகளை நடத்தியமை நேரடியாக சுகாதார பிரிவினால்

உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு பொறுப்பான தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு