பயணத்தடை மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறிய யாழ்.ஐந்துசந்தி பள்ளிவாசல் நிர்வாகம் சிக்கலில்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறிய யாழ்.ஐந்துசந்தி பள்ளிவாசல் நிர்வாகம் சிக்கலில்..

பயணத்தடை மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறி தொழுகை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.ஐந்துசந்தி பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 04/06/2021 வெள்ளிக்கிழமை கொவிட் 19 பயணக் கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 நபர்கள் பள்ளிவாயலில் ஒன்று கூடி இருந்தமையின் காரணமாக 

பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த பள்ளிவாசலின் தலைவர் உட்பட அனைத்து நிருவாகிகளையும், 

பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விஷேட நிருவாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கு 

இலங்கை வக்பு சபை தீர்மாணித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு