யாழ்.நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை! பயண தடையை மீறியோருக்கு எச்சரிக்கை..

யாழ்.மாநகரம் மற்றும் மாநகரை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத் தடையினை மீறி வீதியில் பயணிப்போர் கட்டுப்படுத்தும் முகமாக
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான யாழ்.பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் பொலிஸ் அணியினரால்
நகரப் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மாவட்ட செயலக பகுதி, பாசையூர், குருநகர் பகுதிகளில் பொலிசாரினால்
குறித்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்போது பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் தேவையற்று நடமாடியவர்கள் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.