யாழ்.சுன்னாகத்தில் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தும் 10 கொரோனா நோயாளர்கள், இராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தும் 10 கொரோனா நோயாளர்கள், இராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு..

யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர். 

மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர்.

சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்ல இன்று பிற்பகல், அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்போது அவர்கள், தங்களுக்கு தொற்று இல்லை எனவும் பரிசோதனையிலும் நம்பிக்கை இல்லை எனவும் கூறி சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி ஊடாக 

செல்வதற்கு மறுத்து விட்டனர்.மேலும் இந்த விடயத்தில் தங்களை வற்புறுத்தினால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று எச்சரித்தமையை தொடர்ந்து 

அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு