யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த 3 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளது..! மேலும் 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த 3 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளது..! மேலும் 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கலில்..

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த 3 கிராமங்கள் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்பொழுது உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஜே189, 190 ஆகிய 

கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன அதே நேரத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அரசடிப்பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவும் அதாவது அன்ரனிபுரம், தையிட்டி அதேபோல 

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு