யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தை பகுதியில் வீடொன்று தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தை பகுதியில் வீடொன்று தீக்கிரை..

யாழ்.வட்டுக்கோட்டை சங்கரத்தையில் வீடொன்று நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் முதியவர் ஒருவர் மட்டுமே வசித்து வருகின்றார். 

இந்த நிலையில் நேற்று காலை அந்த வீடு திடீரெனத் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை அவதானித்த அயலில் உள்ளவர்கள் விரைந்து செயற்பட்டு 

தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.இருப்பினும் வீடும் மோட்டார் சைக்கிளும் தீயில் அகப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

எனினும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.இத் தீ விபத்திற்கான காரணம் மின்சார ஒழுக்கா அல்லது வேறு காரணங்களா 

என இதுவரை கண்டறியப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு