யாழ்.மாநகரில் பயணத்தடை நேரத்தில் கொள்ளை..! சந்தேகநபர்கள் 3 பேர் கைது, வாள்களும், பெருமளவு பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் பயணத்தடை நேரத்தில் கொள்ளை..! சந்தேகநபர்கள் 3 பேர் கைது, வாள்களும், பெருமளவு பொருட்களும் மீட்பு..

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்.ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து தொலைக்காட்சி, துவிச்சக்கர வண்டி மற்றும் மின்சாதன பொருட்கள் ,விலை உயர்ந்த உணவு பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால் பக்கெட்டுகள் உட்பட5 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் 

குறித்த கடை உரிமையாளர்களினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்றைய தினம் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதிகளை 

சேர்ந்தவர்கள் எனவும் 20 தொடக்கம் 30 வயதினை உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு