யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு கொரோனா சிகிச்சை விடுதிகளும் நிரம்பிவிட்டது..! மக்கள் பொறுப்புடன் நடவுங்கள், பதில் பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு கொரோனா சிகிச்சை விடுதிகளும் நிரம்பிவிட்டது..! மக்கள் பொறுப்புடன் நடவுங்கள், பதில் பணிப்பாளர் அறிவிப்பு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, 

போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இரு விடுதிகளிலும் 

நோயாளர்கள் நிரம்பியிருப்பதாக கூறியுள்ள பணிப்பாளர், மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கேட்டிருக்கின்றார். மேலும் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கும் 5 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாக 5 படுக்கைகளே உள்ளதெனவும் பதில் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு