செப்டம்பர், அக்டோபரில் மீண்டும் IPL...

ஆசிரியர் - Admin
செப்டம்பர், அக்டோபரில் மீண்டும் IPL...

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 14 ஐபிஎல் சீசனை செப்டம்பர் 15, அக்டோபர் 15 இடையே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தது:

கொரோனாவைக் கருத்தில் கொண்டே அனைத்துத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு செப்டம்பர் 15 - அக்டோபர் 15 இடையே ஐபிஎல்-ஐ நடத்த திட்டமிட்டு வருகிறோம். 25 நாள்களில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்தி முடிக்கப் பார்க்கிறோம்.

இது தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம். இதுபற்றி சனிக்கிழமை நடைபெறும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டம் செப்டம்பர் 14 ஆம் திகதி முடிவடைகிறது. தனிமைப்படுத்தும் நாள்களைக் குறைக்கும் வகையில், இந்திய வீரர்களை பிரிட்டன் பாதுகாப்பு வளையத்திலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பாதுகாப்பு வளையத்துக்கு அழைத்து வருவது குறித்து திட்டமிடவுள்ளோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு