கொலை வழக்கில் கைதான சுவில்குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்!!

ஆசிரியர் - Editor II
கொலை வழக்கில் கைதான சுவில்குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்!!

சக வீரரை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார் வடக்கு ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இருவருக்கும் இடையில் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுசில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் சாகர் தான்கட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். மல்யுத்த வீரர் சுசில் குமாரைத் பொலிஸார் தேடி வந்தனர்.

மேலும் சுசில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என டெல்லி பொலிஸார் அறிவித்தனர். 

தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை பொலிஸார் கைது செய்தனர். 

சுசில் குமாரை 6 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஒலிம்பிக் வெற்றியாளரான சுசில்குமார் இந்திய ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். வடக்கு ரெயில்வேயில் மூத்த வணிக மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் தற்போது கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு