2 ஆவது பி.சி.ஆர் முடிவுகளில் தொற்று இல்லை!! -சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை-பங்களாதேஸ் போட்டி-

ஆசிரியர் - Editor II
2 ஆவது பி.சி.ஆர் முடிவுகளில் தொற்று இல்லை!! -சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை-பங்களாதேஸ் போட்டி-

இலங்கை கிரிக்கெட் அணியின் குழாமில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிறுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை - பங்களாதேஸ் ஒருநாள் தொடர் திட்டமிட்டவாறு 12.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்க பங்களாதேஸ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் அணி வீரர்களான இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாசுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனால் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. இந்நிலையில் குறித்த 3 பேருக்கும் இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் சிரான் பெர்னாண்டோவுக்கு தொற்று மீண்டும் உறுதியாகியுள்ளது. இருப்பினும் ஏனைய இருவருக்கும் தொற்று இல்லை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் திட்டமிட்டவாறு நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு