சக வீரரை அடித்து கொலை செய்த சம்பவம்!! -தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமார் இன்று கைது-

ஆசிரியர் - Editor II
சக வீரரை அடித்து கொலை செய்த சம்பவம்!! -தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமார் இன்று கைது-

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தங்கார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சாகர் தங்கார் கடுமையாக தாக்கப்பட்டார். 

பலத்த காயமடைந்த சாகர் தங்காரை அவரது நண்பர் வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். 

இந்நிலையில் மல்யுத்த வீரர் சுசில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சிலரை பொலிஸார் தேடி வந்தனர். இருப்பினும் சுசில் குமார் தலைமறைவானார். 

தனது இடத்தை மாற்றிக்கொண்டே வந்ததால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இந்நிலையில், சுசில் குமாரை டெல்லி தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை பொலிஸ் தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு