இலங்கை கிரிக்கெட் குழாமில் 3 பேருக்கு கொரோனா!! பங்களாதேஸ் தொடர் கைவிடப்படுமா?

ஆசிரியர் - Editor II
இலங்கை கிரிக்கெட் குழாமில் 3 பேருக்கு கொரோனா!! பங்களாதேஸ் தொடர் கைவிடப்படுமா?

பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த தொடரை கைவிட்டு இலங்கை அணி நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணி வீரர்களான இசுரு உதான மற்றும் சிரான் பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், அக்குழாமில் இணைந்துள்ள பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாசுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியான 3 பேருக்கும் இன்று 2 ஆவது தடவையாக பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு