வடக்கு மாகாணசபை அக்கறையுடன்செயற்பட்டிருந்தால் எமது மாணவர்கள் மேலும்சாதித்திருப்பர் :-டக்ளஸ் தேவானந்தா!

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாணசபை அக்கறையுடன்செயற்பட்டிருந்தால் எமது மாணவர்கள் மேலும்சாதித்திருப்பர் :-டக்ளஸ் தேவானந்தா!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்தஅனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்தவாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள சாதாரணதர பரீட்சையில்சித்தியெய்தி சாதனை படைத்த மாணவர்களுக்கானவாழ்த்துச் செய்தியிலேயே டக்ளஸ் தேவானந்தாஇவ்வாறு தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரசாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம்தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில்யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனிசுரேஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார் என்பது  அந்தமாணவியின் முயற்சிக்கும் அவரை கற்பித்தஆசிரியர்கள் அவரது பெற்றோர் மற்றும் பாடசாலைநிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்என்பதுடன் நடந்துமுடிந்த சாதாரணதர பரீட்சையில்சிறந்த அடைவு மட்டத்தை எட்டி வடக்கு கிழக்குமாகாணங்களில் நல்ல பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களும்பாராட்டுக்குரியவர்களே.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றி சிறந்தபெறுபேறுகளை அடையாது இருக்கும்மாணவர்களையும் அவர்களது முயற்சிகளையும்நிச்சயம் நாம் பாராட்டியே ஆகவேண்டும் என்பதுடன்அவர்களது எதிர்காலமும் சிறப்பாக கல்வித்துறையில்அமைய அனைத்து தரப்பினரும் முன்னின்று உழைக்கவேண்டும்.

எமது மாணவர்களிடம் அதிக திறன்களும்ஆற்றல்களும் இருந்தும் வடக்கு மாகாணசபை எமதுமாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாடு தொடர்பானசெயற்பாடுகளில் அதிக அக்கறையுடன்செயற்பட்டிருக்குமேயானால் மாணவர்களின் அடைவுமட்டங்கள் மேலும் அதிகரிக்கக்கூடியதாகஇருந்திருக்கும்.  ஆனால் அவர்களது செயற்றிறனற்றதிட்டமிடப்படாத நடவடிக்கைகளின் காரணமாகவேஎமது மாணவச் செல்வங்களின் அடைவு மட்டத்தைஅதிகரிக்க முடியாது போகின்றது என்பதையிட்டும்நான் மனம்வருந்துகின்றேன்.

அந்தவகையில் எமது மாணவர்கள் கிடைத்தபெறுபேறுகளை ஆதாரமாகக் கொண்டு உயர்தரக்கல்வியை தொடர்ந்து முன்னெடுப்பதுடன்எதிர்காலத்தில் கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும்முன்னேற்றமடைந்து அந்தந்தத் துறைகளில்மிளிரவேண்டும் என்பதே எனது பெருவிருப்பாகும்என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு