யாழ்.மாவட்டத்தில் இறுக்கமான பொலிஸ், இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் நாவற்குழியில் 5 வீடுகள் மற்றும் கோவில் உடைத்து துணிகர கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இறுக்கமான பொலிஸ், இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் நாவற்குழியில் 5 வீடுகள் மற்றும் கோவில் உடைத்து துணிகர கொள்ளை..!

யாழ்.மாவட்டத்தில் முழு நேர பயணத்தடை மற்றும் இறுக்கமான கண்காணிப்புக்கு மத்தியில் நாவற்குழி - 5 வீட்டுத்திட்ட பகுதியில் 5 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம், மற்றும் கோழிகளை திருடி சென்றிருக்கின்றனர். 

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது, ஒரு வீட்டில் 1இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணமும், மற்றொரு வீட்டில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்கள், மற்றைய வீட்டில் 16வளர்ப்பு கோழிகள், மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகள் , 

ஐந்தாவது வீட்டில் 5வளர்ப்பு முயல்கள் என்பன திருடப்பட்டுள்ளன. இதேவேளை, நாவற்குழி சித்திர வேலாயுதர் ஆலயத்தினுள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள், ஆலயத்தினுள் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவங்கள் தொடர்பில், வீடுகளின் உரிமையாளர்கள், ஆலய நிர்வாகத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு