யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.பருத்துறையை சேர்ந்த 48 வயதான பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.பருத்துறையை சேர்ந்த 48 வயதான பெண்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பருத்தித்துறையை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தொிவித்திருக்கின்றது. 

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய விபரங்கள் உள்ளடக்கிய அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில்,பருத்தித்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 48 வயதுடைய பெண் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 13 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். 

நியூமோனியாவுடன் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு