தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த இருவருக்கு கொரோனா..! திரிபுபட்ட இந்திய வைரஸா? ஆய்வுக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த இருவருக்கு கொரோனா..! திரிபுபட்ட இந்திய வைரஸா? ஆய்வுக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு..

யாழ்ப்பாணத்திற்கு தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்திருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இருவருடைய மாதிரிகளும் ஸ்ரீ ஜெயவர்த்தனுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி மன்னாருக்குள் நுழைந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு காரைநகர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைப்பட்டிருந்தவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் கடந்த 12ம் திகதி கடல்வழியாக யாழ்.குருநகர் பகுதிக்கு வந்திருந்த 4 பேரில் ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் வேகமாக பரவும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை ஆய்வுகளின் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரியவரும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு