வீட்டின் முன் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் மின் ஒழுக்கினால் மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண் உயிரிழப்பு..! கோண்டாவிலில் சம்பவம்..

வீட்டின் முன் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் ஏற்பட்டிருந்த மின் ஒழுக்கினால் மின்சாரம் தாக்கியதில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கோண்டாவிலை சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி(வயது37) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். வீட்டின் முன் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் மின் ஒழுக்கு ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
அவரைக் காப்பாற்ற கணவர் முற்பட்ட போது அவருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தையடுத்து குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
எனினும் இரண்டு நாள்களின் பின் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய யாழ்.போதனா வைத்தியசாலை
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.