யாழ்.மாநகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி விசேட சோதனை நடவடிக்கையில்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி விசேட சோதனை நடவடிக்கையில்..!

யாழ்.மாவட்டத்தில் பூரண முடக்கல் அமுலில் இருக்கும் நிலையில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள கொரொனா தீவிர நிலையினையடுத்து தொற்று நிலையினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் மூன்று நாட்களுக்கு 

பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறாத வண்ணம் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.நகரப் பகுதிகளில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையினர் 

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் யாழ்ப்பாண குடாநாட்டின் பிரதான வீதிகளில் பொது இடங்களில் ரோந்து நடவடிக்கையினை 

 ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் மேற்கொண்டு வருகின்றார்கள் வீதிகளில் அத்தியாவசிய தேவை, 

வைத்திய சேவையை பெறும் நோக்கில் பயணிப்போர் தவிரந்த ஏனையோரை இடை நிறுத்தி எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு