வீதி முழுவதும் வீசப்பட்டிருந்த காசோலைகள்..! குழப்பத்தில் மக்கள், பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
வீதி முழுவதும் வீசப்பட்டிருந்த காசோலைகள்..! குழப்பத்தில் மக்கள், பொலிஸார் விசாரணை..

கிளிநொச்சி - புதுக்காடு பகுதியில் இன்று காலை வீதியில் பெருமளவு காசோலைகள் வீசப்பட்டிருக்கின்றது. 

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு சந்தி மற்றும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுவரித்திணைக்கள அலுவலகத்தை அண்மித்த பகுதியிலும் 

இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளன.வீசப்பட்டுள்ள காசோலைகள் அரச மற்றம் தனியார் வங்கிகளினுடையது என்பதுடன், அவை பயன்படுத்தப்பட்டும் உள்ளன. 

ஏ9 வீதியில் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளமையானது கேள்விகளை எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்பட்ட காசோலைகள் எனினும் அது என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டுள்ளன 

என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.சுமார் நூற்றுக்கு மேற்பட்ட காசோலைகள் இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் பொலிசாரு்ம, பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு