கொரோனா தொற்றுக்குள்ளான 3 கர்ப்பவதி பெண்களுக்கு யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சை..! நேற்றும் ஒருவர் அனுமதி..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான 3 கர்ப்பவதி பெண்களுக்கு யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சை..! நேற்றும் ஒருவர் அனுமதி..

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 கர்ப்பவதி பெண்கள் சிகிச்சை பெற்றுவருவதாக சாவகச்சோி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்கனவே இரண்டு கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நமது வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான கட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் இருக்கின்ற வைத்தியர்களை சுழர்ச்சி முறையில் பயன்படுத்தி 

சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு உரிய சிகிச்சைகள் வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலதிக சிகிச்சைக்காள் தேவைப்படுமாயின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி 

வைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு