6 மணிக்கு பின்னரும் மதுபானசாலை முன் வரிசையில் நின்றவர்களை விரட்டியடித்த இராணுவம் மற்றும் பொலிஸ்..!

ஆசிரியர் - Editor I
6 மணிக்கு பின்னரும் மதுபானசாலை முன் வரிசையில் நின்றவர்களை விரட்டியடித்த இராணுவம் மற்றும் பொலிஸ்..!

நாட்டில் இன்று இரவு 11 மணி தொடக்கம் இறுக்கமான பயண கட்டுப்பாடு விதிக்கப்படுவதுடன் மாலை 6 மணியுடன் மதுபான சாலைகளை மூடுமாறும் பணிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மணி ஆன பின்னரும் மதுபானசாலை முன் வரிசையில் நின்றவர்கள் துரத்தப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மதுபானம் வாங்குவதற்காக 6 மணி ஆன பின்னரும் வரிசையில் நின்றவர்களை இராணுவம் துரத்தியடித்துள்ளது. இதேபோல் வவுனியா மாவட்டத்திலும் பொலிஸார் மதுபானசாலைகளை மூடி மது பிரியர்களை துரத்தியிருக்கின்றனர். 

இதேபோன்ற சம்பவம் பல இடங்களில் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு