முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்டதற்கு சாவகச்சோி நகரசபையில் கண்டன தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடைக்கப்பட்டதற்கு சாவகச்சோி நகரசபையில் கண்டன தீர்மானம்..!

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈகை சுடரேற்றும் பீடம் உடைக்கப்பட்டமைக்கு சாவகச்சோி நகரசபையில் கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்காக பொது நினைவுக்கல் ஒன்றை அமைப்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைக்கு முயற்சித்த நிலையில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியுடன் பயண கட்டுப்பாடு அமுலான நிலையில் நினைவு முற்றத்திலிருந்து ஒழுங்கமைப்பாளர்கள் விலகிய நிலையில் நினைவு முற்றத்தில் ஈகை சுடரேற்றுவதற்கான பீடம் உடைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சாவகச்சோி நகரசபையின் இன்றைய அமர்வில் நகரசபை பிரதி தவிசாளர் பாலமயூதரன் கண்டன பிரேரணை ஒன்றை சமர்பித்திருந்த நிலையில் உறுப்பினர்கள் ஏனமனதான ஆதரவினை வழங்கி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு