தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகருக்கு கடல்வழியாக வந்தவர்களுக்கு உதவிய 4 பேர் கடற்படையினால் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகருக்கு கடல்வழியாக வந்தவர்களுக்கு உதவிய 4 பேர் கடற்படையினால் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

தமிழகத்திலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு வந்தவர்களுக்கு உதவிய 4 பேர் கடற்படையினரால் கொரோனா தடுப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு தப்பிவரும் சம்பவங்கள் 

அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறான 3 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்குள் வந்தவர்கள் 4 பேரை தனிமைப்படுத்தி பீ.சி.ஆர் பரிசோதனைக்கு

உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களை அழைத்துவந்தோர் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என 4 பேரை அடையாளம் கண்டுள்ள கடற்படையினர், 

அவர்களை காரைநகரில் உள்ள கொரோனா தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி தனிமைப்படுத்தியுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்நிலையில் கடல்வழியாக வந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என 9 பேர் தற்போது காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு