தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு கடல்வழியாக வந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு கடல்வழியாக வந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!

கோப்பு படம்

தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாக யாழ்.குருநகருக்கு வந்திருந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

தமிழகம் ஈரோடு மாவட்டம் அரிச்சலுார் இடைத்தங்கல் முகாமில் வசித்துவந்த தாய், மகள் மற்றும் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படகுமூலம் தமிழகத்திலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு ஒரு சில நாட்களுக்குள் வந்துள்ளனர். 

குறித்த தகவல் வெளியான நிலையில் துரிதமாக செயற்பட்ட சுகாதார பிரிவினர் மற்றும் யாழ்.பொலிஸார் குறித்த 4 பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனை மேறகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 

பரிசோதனை முடிவுகளின் பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு