யாழ்.மாவட்டத்திற்கு பொருட்கள் கொண்டுவரும் பாரவூர்தி உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு பொருட்கள் கொண்டுவரும் பாரவூர்தி உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு இன்று தொடக்கம் புதிய நடைமுறை..!

யாழ்.மாவட்டத்திற்கு வெளி மாகாணத்திலிருந்து பொருட்கள் கொண்டுவரும் பாரவூர்தி உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் முன் அனுமதியை பெற்றுக் கொள்ளும்படி யாழ்.வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இன்று தொடக்கம் புதிய நடைமுறையின் அடிப்படையிலேயே யாழ்.குடாநாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்லல்பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதனடிப் படையில் போக்கு வரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் யாழ்.அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து யாழ்.வணிகர் கழகத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் 

அதற்கான அனுமதி பெற்றுத் தரப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கும்/ லொறி உரிமையாளர் பொதிகள் போக்குவரத்தில் ஈடுபடு வோருக்குதெரியப்படுத்துகின்றோம். ஆகையால் விரைவாக படிவங்களை பூர்த்தி செய்து 

யாழ்.வணிகர் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இத்தகவலை இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.              என அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு