யாழ்.மாநகரில் கிருமி தொற்று நீக்கும் பணியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் மும்முர நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் கிருமி தொற்று நீக்கும் பணியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் மும்முர நடவடிக்கை..!

யாழ்.மாநகரில் தொற்று நீக்கும் நடவடிக்கையினை படையினர் இன்று காலை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நாடு முழுவது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக யாழ்.மாநகரில் இன்று காலை தொற்று நீக்கும் நடவடிக்கை படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 51-வது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில் ராணுவத்தின்  512வது பிரிகெட் இராணுவத்தினரால் 

இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் மத்திய பேருந்து நிலையம், 

கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி  ஆகிய வீதிகள் இன்று காலை  ராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்துவிசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு