யாழ்.சாவகச்சோியில் அரச காணிக்கு உரிமைகோரும் இரு சமயத்தவர்கள்..! ஆவணம் கிடைத்தவுடன் நடவடிக்கை என பிரதேச செயலர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் அரச காணிக்கு உரிமைகோரும் இரு சமயத்தவர்கள்..! ஆவணம் கிடைத்தவுடன் நடவடிக்கை என பிரதேச செயலர் அறிவிப்பு..

யாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் உள்ள அரச காணிக்கு இரு சமயத்தவர்கள் உரிமைகோரி பெயர் பலகைகளை நாட்டியிருக்கும் நிலையில் இரு பெயர் பலகைகளும் பிடுங்கி எறியப்படும். என பிரதேச செயலர் அறிவித்துள்ளார். 

தனங்கிளப்பு - கேரதீவு பகுதியில் அரச காணி ஒன்றில் ஒரு சமயத்தவர்கள் தமது சொத்து என காணியில் அடையாளப்படுத்தி பெயர் பலகை நாட்டியுள்ள நிலையில், அதற்கு கீழ் மற்றொரு சமயத்தவர்கள் தமது காணி என பெயர் பலகை நாட்டியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக சாவகச்சோி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேற்படி காணி அரச காணி என பிரதேச செயலக பதிவில் உள்ளது. அதற்கான ஆவணங்களும் உள்ளது. இதற்கிடையில் காணிக்கு இரு சமயத்தவர்கள் உரிமைகோருகின்றனர். 

இதனால் மத்திய காணி திணைக்களத்தின் கவனத்திற்கு விடயத்தை எடுத்துச் சென்றுள்ளதுடன், அதனை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளேன். திணைக்களத்தின் முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் இரு மதத்தவர்களினது பெயர் பலகைகளும் நீக்கப்படும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு