பிறந்த நாள் நிகழ்விற்குள் புகுந்து காதலி உட்பட 6 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்!! -தன்னை தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டார்-

ஆசிரியர் - Editor II
பிறந்த நாள் நிகழ்விற்குள் புகுந்து காதலி உட்பட 6 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்!! -தன்னை தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டார்-

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில், நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

துப்பாக்கி சூடு நடத்திய இளைஞரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கொல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் காதலன் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதுடன், தானும் தற்கொலை செயதிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு