மாகாணங்களுக்கிடையில் அல்லது மாவட்டங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்க அரசு தயார்..!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் அல்லது மாவட்டங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்க அரசு தயார்..!

மாகாணங்களுக்கிடையில் அல்லது மாவட்டங்களுக்கிடையில் தேவையான சந்தர்ப்பத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். கொரோனா தொற்று நிலைமை 

நாளாந்த அடிப்படையில் மாற்றமடைவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஜனவரி முதல் தொடங்கிய தொற்றின் மோசமான அதிகரிப்பை காட்டுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு